| வணபிதா ஒருவர் காணாமல்... |
|
வன்னியில் இடம்பெற்ற பேரவலத்தின் போது இறுதிவரை மக்களொடு தங்கியிருந்து
பணியாற்றி வந்திருந்த வணபிதா ஒருவர் காணாமல் போயிருப்பதாக யாழ் ஆயர்
இல்லம் தெரிவித்துள்ளது. புனித பத்திரிசியார் (சென் பற்றிக்ஸ்)
கல்லூரியினது முன்னாள் அதிபராக இருந்தவரும் வட கிழக்கு கல்வி
மேம்பாட்டுக்கான அமைப்பினது தலைவராகப் பணியாற்றி வந்திருந்தவருமான 70
வயதுடைய வண பிதா பிரான்சிஸ் ஜோசப் என்பவரே இவ்வாறு காணாமல் போயிருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சொந்த இடமாகக்
கொண்டவர் ஆவார். வன்னியில் பணியாற்றி வந்த இவர் கிளிநொச்சி அம்பாள்குளம்
தேவாலயத்தில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார். இறுதிவரை வன்னியில்
புதுமாத்தாளன் வரை தனது சக கத்தோலிக்க மத குருக்களுடன் இடம்பெயர்ந்து
சென்றிருந்த இவர் இறுதியாக புதுமாத்தளான் பகுதியில் இடம்பெற்ற
நடவடிக்கையின் பின்னர் வன்னியில் இருந்து அவர் பற்றிய தகவல்கள் எவையும்
கிட்டியிருக்கவில்லை என ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
globaltamilnews.net 2009-05-28 |
